Skip to main content

தமிழ், ஆங்கிலத்தில் 'நோட்டா': ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்

ஓட்டு சீட்டில், 'நோட்டா' (யாருக்கும் ஓட்டு இல்லை) என, தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு, முடிவுக்கு வந்தது.


சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், சத்தியசந்திரன், தாக்கல் செய்த மனுவில், 'ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களுக்கு என, சின்னங்கள் இருக்கும். எந்த வேட்பாளருக்கும், ஓட்டுப் போட விரும்பாதவர்கள், தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய ஏதுவாக, நோட்டா என்ற பட்டன் அமைக்கப்படுகிறது. அதற்கு, சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஜி.ராஜகோபால், ''நோட்டா பற்றி, தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டுள்ளது. ஓட்டுச் சீட்டில், ஆங்கிலம், தமிழில், நோட்டா அச்சிடப்பட்டிருக்கும்,'' என்றார். தேர்தல் கமிஷன் தரப்பில் வெளியிடப்பட்ட, பத்திரிகை குறிப்பையும், கோர்ட்டில் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில், நோட்டா சின்னம் பற்றி பரிந்துரை செய்ததை, தேர்தல் கமிஷன் பரிசீலிக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கை, முதல் பெஞ்ச் பைசல் செய்தது. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கறுப்பு நிற பின்னணியில், செவ்வக வடிவத்துக்குள், நோட்டா என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ஓட்டுச் சீட்டில், தமிழில், 'மேற்காணும் நபர்களில் எவருமில்லை' எனவும் அச்சிடப்பட்டிருக்கும்' என, கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு