Skip to main content

1999 முதல் 2007 வரை பயின்ற மாணவர்கள் தனித்தேர்வு எழுத வாய்பு: நெல்லை பல்கலை. அறிவிப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளை சேர்ந்த ஏப்ரல் 2014க்கான இளநிலை மற்றும் முதுநிலை தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 16ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இளநிலை மற்றும் முதுநிலை 1999ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களில் இதுவரை தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பாதவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500க்கான அபராத கட்டணம் சேர்த்து தேர்வுக்கான விண்ணப்பப்படிவத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள், தேர்வாணையர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை 12 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்