Skip to main content

CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான, தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகையை நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2017 - 18 முதல், பொது தேர்வு முறை அமலானது. அதுவரை, பள்ளி அளவில் நடந்த தேர்வு முறை மாற்றப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 



எனவே, மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காமலிருக்க, மதிப்பெண்ணில் சலுகை வழங்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது.இதன்படி, 10ம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், 33 சதவீதமும், அக மதிப்பீட்டில், 33 சதவீதமும், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை, 2017 - 18க்கு மட்டும் தளர்த்தப்பட்டது. பாடத்திலும், அகமதிப்பீட்டிலும் சேர்த்து, 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, கூறப்பட்டது. 

இந்தச் சலுகை, ஓர் ஆண்டுக்கு மட்டுமே என, 2017ல், தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், 'இந்த ஆண்டும், சலுகையை நீட்டிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணுக்கான, 2017 - 18க்கான சலுகையை, நடப்பு கல்வி ஆண்டுக்கும் நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா