Skip to main content

கல்லூரிகளுக்குப் புதிய நிபந்தனைகள்: யுஜிசி!

மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்தால், அவர்களது சேர்க்கைக் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து யுஜிசி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் புதிய நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளது. அதில், மாணவர்களைக் கல்லூரியின் சேர்க்கைக் கட்டணம், பாடப் பிரிவு, நிர்வாக வசதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தகத்தை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“கல்லூரி இணையதளத்தில் புகார் செய்யும் வசதி இடம்பெற்றிருக்க வேண்டும். அதில் வரும் புகார்களுக்கு, 30 நாட்களில் தீர்வு காண வேண்டும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

மாணவர்கள் சேர்க்கையின்போது, அசல் சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சுய கையொப்பமிட்ட நகல்களே போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது மட்டும் அசல் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு, மாணவர்களிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும்.

தேர்வுக் கட்டணம் அல்லது ஓராண்டுக்கான கட்டணம் மட்டுமே மாணவர்களிடம் இருந்து பெற வேண்டும். ஒட்டுமொத்தப் படிப்புக் காலத்துக்கான கட்டணத்தை ஒரே முறையில் பெறக் கூடாது.

மாணவர்கள் சேர்க்கை முடியும் முன்பு மாணவர் வேறு கல்லூரியில் சேர விரும்பினால், அவர் செலுத்திய கட்டணத்தில் 5 சதவிகிதக் கட்டணத்தை மட்டும் பிடித்துக்கொண்டு மற்ற தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டால், அவர் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. டெபாசிட் பணம் மட்டும் கொடுக்க வேண்டும்” என்று யுசிஜியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. யுஜிஜி மானியம், உயர் கல்வி மானியம் ரத்து செய்யப்படும். சிறப்புத் திட்டங்களுக்கு யுஜிசி உதவி செய்வதும் நிறுத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பும் விளம்பரங்களாக வெளியிடப்படும். கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு