Skip to main content

தயார்! நாட்டின் புதிய கல்வி கொள்கை வரைவு... பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் சேர்ப்பு

புதுடில்லி : நாட்டின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு, பல கட்டங்களுக்கு பின், இறுதியாக, தயார் நிலையில் உள்ளது; இம் மாதம் கடைசியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம், இந்த கொள்கை வரைவுசமர்ப்பிக்கப்பட உள்ளது. இதில், பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.



நாட்டின், புதிய கல்வி, கொள்கை, வரைவு,தயார்! 

நாட்டின் கல்விக் கொள்கை, 1986ல், தயாரிக்கப் பட்டது; பின், 1992ல், ஆய்வு செய்து, திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டன. மாறி வரும் சமூக, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


கடந்த, 2014ல், லோக்சபா தேர்தல் நடந்தபோது, 'புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்து இருந்தார்.பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதங்களை தொடர்ந்து, கல்விக் கொள்கை வரைவை தயாரிக்க, புதிய குழு, 2017, ஜூனில் உருவாக்கப் பட்டது. இக் குழுவுக்கு, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், கஸ்துாரி ரங்கன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த, ஜூலை மாதத்தில், கல்விக் கொள்கை

வரைவு தயாரித்து சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டு இருந்தது; பின், ஆக., 31க்கு தள்ளிவைக்கப்பட்டது. அப்போதும் பணி முடியாததால், அக்., 31க்குள் சமர்ப்பிக்கும்படி, கெடு நீட்டிக்கப்பட்டது. இந் நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு, இறுதி செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

மத்திய அரசு, இதுவரை செய்துள்ள பல்வேறு சீர்திருத்தங்களுடன் ஒத்து போகும் வகையில், புதிய கல்விக் கொள்கை வரைவில் ஷரத்துகள் இருக்கும் என, தகவல்கள் கூறுகின்றன.பாரம்பரிய அறிவு, இந்திய மொழிகள், கணிதம் போன்ற வற்றுக்கு, பள்ளி அளவிலான பாடத் திட்டங்களில் முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், பாடங்களில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், பல சந்தர்ப்பங் களில் கருத்து தெரிவித்துள்ளார்.


வரும், 2020 - 2040 காலத்தை கருத்தில் வைத்து, கல்விக் கொள்கை வரைவு இருக்கும் என்றும், பார்லிமென்டின் இரு சபைகளிலும்சமர்ப்பிக்க போதிய அவகாசம் கிடைக்கும் என்றும், அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதிய கல்விக் கொள்கை வரைவு, இம்மாத இறுதி யில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.இந்த வரைவை, மனித வள மேம்பாட்டுத் துறை கவனமாக ஆய்வு செய்து, தேவையான

திருத்தங்களை செய்த பின், பார்லி.,யில் சமர்ப்பிக்க உள்ளது.

ஹரியானா பல்கலைக்கு கவுரவம்!


'பிரிக்ஸ்' எனப்படும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கல்லுாரிகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, 'கியூ.எஸ்., - பிரிக்ஸ் பல்கலை தர வரிசை' என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளில் உள்ள, 9,000 பல்கலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் இடம்பெற்ற, 31 புதிய பல்கலைகளில், இந்தியாவைச் சேர்ந்த, 14 பல்கலைகளும் உள்ளன.


'கியூ.எஸ்., - பிரிக்ஸ் பல்கலை தரவரிசை' பட்டியலில் இடம்பெற்ற, முதல், 3 சதவீத பல்கலை களில், மிக இளைய பல்கலை என்ற அந்தஸ்து, ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள, ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கு கிடைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு