Skip to main content

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஈரோடு மாவட்டம் கல்கடம்பூர் அரசுப்பள்ளி மாணவி


மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஈரோடு மாவட்டம் கல்கடம்பூர் அரசுப்பள்ளி மாணவி




ஸ்ரீராம் திருக்குறள் இலக்கியக்கழகத்தின் சார்பாக மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி சென்னையில் 06/10/2018 அன்று நடைபெற்றது.



தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களிலிருந்து முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 1069 மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கல்கடம்பூர் மலைப்பகுதியைச்சார்ந்த அரசு மேனிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கு.ஜெயந்தி மூன்றாம் பரிசுக்கான கேடயமும் ரொக்கப்பரிசு ரூ.5000 பெற்றார்.

இத்துடன் ரூ.3333 மதிப்பிலான புத்தகங்கள் பள்ளிக்கு பரிசாக வழங்கப்பட்டன.

வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியை அனைவரும் பாராட்டினார்கள்.

இப்போட்டியை மக்கள் தொலைக்காட்சி நவம்பர் மாதத்தின் வாரங்களில் ஒளிபரப்ப உள்ளது..

நன்றி
அரசு மேனிலைப் பள்ளி
கல்கடம்பூர்
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம்.
9944153366

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு