Skip to main content

"மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்"..! இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..!

ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதாரணத்திற்கு சுனாமி, புயல்,டெங்கு காய்ச்சல், வெள்ளத்தில் மிதந்த சென்னை என சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் சாதாரணமாகவே வந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல் முறையில் புயல் ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணித்து உள்ளார்.
அதன்படி, .
இந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர் மாதம்) முடிந்த பிறகு தமிழகத்தில் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கும என ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணித்து உள்ளார்.
வடகிழக்கு பருவ மழையினால் மதுராந்தகம முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதை எப்படி நம்புவது..? அது உண்மை தானா..? இன்று இருக்கக்கூடிய நிலவரப்படி வானிலையை கணிக்க, நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என மட்டும் தானே கணிப்பார்கள் என பலருக்கும் யோசனைதான்.
ஆனால் இவர் சென்ற ஆண்டே கணித்தது போல சில விஷயங்கள் நடந்து தான் வருகிறது
அதன்படி,
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் என்று கணித்தார். அதே போன்று தான் நடந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 - 11 வரை கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என கணித்து இருந்தார். அவ்வாறே நடந்தது.
அதே போன்று, அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், பேஆப் பெங்காலில் அக் 12 முதல் அக் 16 வரையில், ஆந்திரா ஒரிசா இடையே சைக்லோன் உருவாகும் என கணித்து உள்ளார். இதனால் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட மாவட்டங்கள் - மிதமானதாக இருக்கும் என அவர் கணித்து உள்ளார்
அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. ரெட் அலெர்ட் கூட விடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எப்ப்போது தான் மழை நிற்குமோ என்று தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் தான், அவர் இவ்வாறு கணித்து உள்ளதாகவும் அறிவியல் பஞ்சாங்கம் என்பது உண்மை..ஒரு சில சமயத்தில் தான் கணிதத்தில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் பெரிய மாற்றம் இருக்காது...தான் கணித்த வாறே கட்டாயம் நடக்கும். அறிவியல் பஞ்சாங்கத்தை மேலும் பல வல்லுனர்கள் கொண்டு கணித்தால் 300 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பலவற்றை கணிக்கலாம் என்று உறுதிபட கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்
என்ன நடக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு