Skip to main content

கல்லீரல் செயலிழந்து போக இவைகள் தான் காரணமாம்

மனித உடல் தினமும் ஆரோக்கியத்துடன் இயங்க தேவைப்படும் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு கல்லீரல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் தினமும் நாம் அன்றாடம் செய்யும் ஒருசில பழக்கவழக்கங்கள் நமது கல்லீரலை வலுவாக பாதிப்படைய வைக்கின்றன.

மருந்துகள்


அதிகமாக மருந்துகள் மற்றும் எனர்ஜியை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பவுடர்கள் எடுத்துக்கொள்வதன் மூலமாக கூட கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

தூக்கமின்மை

இரவில் அதிக நேரம் தூங்கமால் இருப்பது கல்லீரலை பாதிக்கிறது, மேலும் தூக்கமின்மை கல்லீரலில் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஏற்பட காரணியாக இருக்கின்றது.

ஊட்டச்சத்து குறைபாடு

உணவில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது மற்றும் அதிகமான உடல்பருமன் போன்றவை கல்லீரலை பாதிப்படைய செய்கிறது.

கொழுப்பு

உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உண்டு வருவதும் கூட கல்லீரலை சுற்றி கொழுப்பு சேர காரணியாக இருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனம், அடிக்ட்டிவ்ஸ் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை தான் கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்துகின்றன.

காய்கறி, பழங்கள்

தினமும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் ஈ, ஜின்க், செலினியம் போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகளை உண்டு வரலாம்.

நச்சுக்கள்

கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை போக்க வைட்டமின் பி சிறந்து செயல்புரிகிறது. பழங்கள், நட்ஸ், முட்டை, மீன், கோழி, பருப்பு போன்றவற்றில் வைட்டமின் பி சத்து மிகுதியாக இருக்கிறது.

அதிகமான கொலஸ்ட்ரால்

உடலில் எல்.டி.எல் எனும் தீய கொழுப்பு அதிகமாக சேர்வதால் இதயம் மட்டுமின்றி கல்லீரலும் பாதிப்படைகிறது.

காலை உணவை தவிர்ப்பது

கல்லீரல் செயல்திறன் குறைபாடு ஏற்படுவதற்கு காலை உணவை தவிர்ப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைக்கும் நபர்கள் தான் இந்த தவறை நிறைய செய்கிறார்கள்.

சிறுநீரை அடக்குதல்

சிலர் சிறுநீரை அடக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது மிகவும் தவறானது. இந்த பழக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை வலுவாக பாதிப்படைய செய்கின்றன.

ஆல்கஹால்

தினமும் மூன்று க்ளாஸ் ஆல்கஹால் பருகுவது கண்டிப்பாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடித்தல்

சிகரட் மூலமாக உடலில் சேரும் நச்சுக்கள் மெல்ல மெல்ல கல்லீரலில் அதிகரித்து, ஆக்ஸிடேடிவ் அழுத்தம் உண்டாகி கல்லீரல் செல்களில் சேதம் ஏற்பட காரணியாக அமைகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு