ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை திருத்தி படிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு இரண்டாம்
பருவ சமூகஅறிவியல் புத்தகத்தில் 5 பிழைகள் இருப்பதை மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கண்டறிந்து திருத்தி உள்ளது.
பிழைகளும், திருத்தங்களும்* குடிமையியல் பகுதி 'மனித உரிமைகள்' பாடத்தில் (பக்கம் 124), மலாலா பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அதில், இரண்டாவது பத்தியில் விடுபட்ட, 'நான் பொது இடத்தில் பேசினேன். அதனால் அடிப்படைவாதிகளின் இலக்கானேன்' என்ற வரிகளை தக்க இடத்தில் சேர்த்து படிக்க வேண்டும்.* அதே பாடத்தில் (பக்கம் 125), 'போக்ஸோ சட்டம்' துணை தலைப்பில், POCSO என்ற ஆங்கில வார்த்தை POSCO என்றும், தமிழில் 'போக்ஸோ' என்பதற்கு பதில் 'பாஸ்கோ' என்றும் தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பதை சரியாக திருத்தி படிக்க வேண்டும்.
அதே பாடத்தில் (பக்கம் 128) இடஒதுக்கீடு என்ற பத்தியில் 8 வது வரியில் 'பெண்களுக்கு 33 சதவீதம்' என்று இருப்பதை 'பெண்களுக்கு 30 சதவீதம்' என்றும், அதே பக்கத்தில் இடஒதுக்கீடு என்ற துணை தலைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் அட்டவணையில், 'பழங்குடியினர் 3 சதவீதம்' என்று அச்சாகி இருப்பதை 'பழங்குடியினர் 1 சதவீதம்' என்றும் சரியாக திருத்தி படிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment