Skip to main content

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை திருத்தி படிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு இரண்டாம்
பருவ சமூகஅறிவியல் புத்தகத்தில் 5 பிழைகள் இருப்பதை மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கண்டறிந்து திருத்தி உள்ளது.


பிழைகளும், திருத்தங்களும்* குடிமையியல் பகுதி 'மனித உரிமைகள்' பாடத்தில் (பக்கம் 124), மலாலா பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அதில், இரண்டாவது பத்தியில் விடுபட்ட, 'நான் பொது இடத்தில் பேசினேன். அதனால் அடிப்படைவாதிகளின் இலக்கானேன்' என்ற வரிகளை தக்க இடத்தில் சேர்த்து படிக்க வேண்டும்.* அதே பாடத்தில் (பக்கம் 125), 'போக்ஸோ சட்டம்' துணை தலைப்பில், POCSO என்ற ஆங்கில வார்த்தை POSCO என்றும், தமிழில் 'போக்ஸோ' என்பதற்கு பதில் 'பாஸ்கோ' என்றும் தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பதை சரியாக திருத்தி படிக்க வேண்டும். அதே பாடத்தில் (பக்கம் 128) இடஒதுக்கீடு என்ற பத்தியில் 8 வது வரியில் 'பெண்களுக்கு 33 சதவீதம்' என்று இருப்பதை 'பெண்களுக்கு 30 சதவீதம்' என்றும், அதே பக்கத்தில் இடஒதுக்கீடு என்ற துணை தலைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் அட்டவணையில், 'பழங்குடியினர் 3 சதவீதம்' என்று அச்சாகி இருப்பதை 'பழங்குடியினர் 1 சதவீதம்' என்றும் சரியாக திருத்தி படிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு