Skip to main content

கிட்னி செயல்படாமல் இருப்பதற்காக காரணங்கள்? அதிர்ச்சி தகவல்!

நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சில பாகங்களில் வேலை மிகவும் முக்கிய வாய்ந்தது. அவ்வாறு முக்கியமான பாகங்கள் ஒரு சிலவைகள் பழுதடைந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் கிட்னி.


கிட்னி என்றால் என்ன?

கிட்னி என்பது நமது உடலில் உள்ள தேவையற்ற நீர் ரத்தத்தில் உள்ள அழுக்கு போன்றவற்றை நீக்கி ரத்த அழுத்தத்தை சீராக வைத்து உடலை சீராக இயங்க மிக முக்கியமான வேலையை செய்கின்றன. இதுவே கிட்னி வேலையாகும். ஒருவேளை உங்கள் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்களின் ரத்த அழுத்தம் குறைந்துவிடும். அல்லது அதிகமாகிவிடும். இதனால் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும் மற்றும் பல நோய்த்தொற்றுகள் உங்களில் ஏற்படும். இதனால் இதயமானது தொடர்ந்து அதிகமாக இயங்க வேண்டியிருக்கும். மிக விரைவிலேயே இதயம் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். செயல்படாமல் இருப்பதற்கான அறிகுறிகள்.


கிட்னி செயல்படாமல் இருப்பதற்காக காரணங்கள்:

மலத்தில் ரத்தம் சேர்ந்து வருதல், நீங்கள் மூச்சு விடும் பொழுதும் இழுக்கும் பொழுதும் ஒரு விதமான இரும்புத்தூள் வாசனையை உணர்வீர்கள். எளிதில் காயங்கள் ஏற்படுதல், மனதளவில் பாதிப்படைந்ததாக உணர்தல் மற்றும் ஞாபக மறதி அதிகமாகுதல், எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுதல், கைகள் மற்றும் கால்கள் செயல் இழந்தது போல் உணருதல், இடுப்பு பகுதிகளில் வலியை உணர்தல், high blood pressure, வலிப்பு வருதல், மூக்கில் ரத்தம் வருதல், இதயம் மிக வேகமாகத் துடிக்கும் அல்லது மிகவும் பொறுமையாக துடித்தல், மனதில் கஷ்டமாக உணர்தல், குறைவாக யூரின் வெளியேறுதல் அல்லது முழுவதுமாக வெளியேறுவது நின்று விடுதல், சிறுநீரோடு சேர்ந்து ரத்தமும் கலந்து வருதல், கால்கள், கைகள் முழங்கால்கள், பாதங்கள் போன்றவைகள் வீக்கம் காணப்படுவது.

கிட்னி ஃபெயிலியர் ஏற்படுவதற்கான காரணங்கள்.


புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், உடல் பருமன், கிட்னி கேன்சர், கிட்னி கல், நீரிழிவு type 1 and 2, நோய் எதிர்ப்பு சக்தியின் பலம் குறைவு, அதிரோஸ்கிளிரோஸ், கல்லீரல் செயலிழப்பு, கிட்னி தொற்று நோய்கள், அதிகப்படியான மருந்துகள் எடுத்துக் கொள்வதினால் போன்றவைகள் கிட்னி செயல் இழப்புக்கு காரணமாக அமைகின்றன.

கிட்னியை பலப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்

அதிகமாக சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது காய்கள் பழங்கள் போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து புகைப் பிடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். குடிப்பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு மற்றும் பிளட் பிரஷர் போன்றவற்றை சரியான விதத்தில் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வது அவசியம். உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்வது, சரியான அளவு உடலில் நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வலி மாத்திரைகளை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் உங்கள் கிட்னியை பாதுகாக்க முடியும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு