Skip to main content

Amazon Great Indian Festival Sale 2018 - Dates And Special Offers Announced!

இந்த ஆண்டிற்கான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்.! தேதி & சலுகை விபரம் அறிவிப்பு!

இந்திய ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமேசானின் இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2018-ற்கான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


அக்டோபர் மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை இந்த மாபெரும் விற்பனை கொண்டாட்டம் நடைபெறும் என அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கிறது.

கொண்டாட்ட விற்பனை
இந்த விற்பனை கொண்டாட்டத்தில் ஸ்மார்ட் போன், வீட்டுஉபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வீடு உபயோக பொருட்களின் விற்பனையைச் சிறந்த சலுகைகளுடன் அமேசான் நிறுவனம் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை கொண்டாட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தாதார்களுக்கு, பொருட்களை வாங்க முன்பே சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது போல இந்த ஆண்டு விற்பையிலும் சிறப்பு அனுமதி முன்பே வழங்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.
   

1600+ பொருட்கள் அறிமுகம்
இந்த சேலின் முதற்கட்டமாக புது டெல்லியில் அமேசான் பெஸ்டிவெ ஹோம் என்ற அமைப்பு போடப்பட்டு சேலில் வெளியிடப்படும் பொருட்களை டிஸ்பிலே செய்யவுள்ளனர். 100க்கும் மேற்பட்ட ப்ராண்ட்களின் வீட்டு அலங்காரம், வீட்டு உபயோகம் மற்றும் கிச்சன் சாதனங்கள் என 1600+ பொருட்களை அறிமுகம் செய்கிறது. இந்த விற்பனையில் இண்டோ-வெஸ்டர்ன், டெக் லைப் ஸ்டைல், தம்பதிகள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான தனித் தனி பிரிவுகளாக பிராண்ட்களுடன் பொருட்களைப் பிரித்திருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

   

எக்கோ ப்ராண்ட்
மேலும் அமேசான் தற்போது புதிதாகக் கைகோர்த்துள்ள எக்கோ ப்ராண்ட் சாதனங்கள் கொண்ட ஸ்மார்ட் ஹோம் மாடல் வீட்டு அமைப்பும் காட்சிக்கு வைக்கப்படும். எக்கோ ப்ராண்ட் சாதனங்களான எக்கோ டாட், எக்கோ பிளஸ் மற்றும் எக்கோ சப்-ற்கான முன்பதிவு நேற்றுமுதல் துடங்கப்பட்டுள்ளது.
   

சலுகைகள்
இந்த விற்பனையின் பொது அமேசான் தனது பணமில்லா பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இதில் முக்கிய குறிப்பாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதல் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுமென்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் அமேசான் பே பேலன்ஸ் டாப் அப் செய்யும் பயனர்களுக்கு உடனடி கேஷ் பேக் ஆப்பராக ரூ.300 வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா