Skip to main content

Amazon Great Indian Festival Sale 2018 - Dates And Special Offers Announced!

இந்த ஆண்டிற்கான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்.! தேதி & சலுகை விபரம் அறிவிப்பு!

இந்திய ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமேசானின் இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2018-ற்கான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


அக்டோபர் மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை இந்த மாபெரும் விற்பனை கொண்டாட்டம் நடைபெறும் என அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கிறது.

கொண்டாட்ட விற்பனை
இந்த விற்பனை கொண்டாட்டத்தில் ஸ்மார்ட் போன், வீட்டுஉபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வீடு உபயோக பொருட்களின் விற்பனையைச் சிறந்த சலுகைகளுடன் அமேசான் நிறுவனம் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை கொண்டாட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தாதார்களுக்கு, பொருட்களை வாங்க முன்பே சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது போல இந்த ஆண்டு விற்பையிலும் சிறப்பு அனுமதி முன்பே வழங்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.
   

1600+ பொருட்கள் அறிமுகம்
இந்த சேலின் முதற்கட்டமாக புது டெல்லியில் அமேசான் பெஸ்டிவெ ஹோம் என்ற அமைப்பு போடப்பட்டு சேலில் வெளியிடப்படும் பொருட்களை டிஸ்பிலே செய்யவுள்ளனர். 100க்கும் மேற்பட்ட ப்ராண்ட்களின் வீட்டு அலங்காரம், வீட்டு உபயோகம் மற்றும் கிச்சன் சாதனங்கள் என 1600+ பொருட்களை அறிமுகம் செய்கிறது. இந்த விற்பனையில் இண்டோ-வெஸ்டர்ன், டெக் லைப் ஸ்டைல், தம்பதிகள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான தனித் தனி பிரிவுகளாக பிராண்ட்களுடன் பொருட்களைப் பிரித்திருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

   

எக்கோ ப்ராண்ட்
மேலும் அமேசான் தற்போது புதிதாகக் கைகோர்த்துள்ள எக்கோ ப்ராண்ட் சாதனங்கள் கொண்ட ஸ்மார்ட் ஹோம் மாடல் வீட்டு அமைப்பும் காட்சிக்கு வைக்கப்படும். எக்கோ ப்ராண்ட் சாதனங்களான எக்கோ டாட், எக்கோ பிளஸ் மற்றும் எக்கோ சப்-ற்கான முன்பதிவு நேற்றுமுதல் துடங்கப்பட்டுள்ளது.
   

சலுகைகள்
இந்த விற்பனையின் பொது அமேசான் தனது பணமில்லா பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இதில் முக்கிய குறிப்பாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதல் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுமென்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் அமேசான் பே பேலன்ஸ் டாப் அப் செய்யும் பயனர்களுக்கு உடனடி கேஷ் பேக் ஆப்பராக ரூ.300 வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு