Skip to main content

புதிய Iphone ன் மேஜிக் சிம்!


புதிய Iphone ன் மேஜிக் சிம்!


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன்களான iPhone XS, iPhone XS Max, iPhone XR மூன்று மாடல்கள் நேற்று வெளியானது. இதில் முதன்முறையாக டூயல் சிம் மற்றும் டூயல் standby வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் அதன் ஐ-போனுடன் புதிய தொழில்நுட்பங்கள் பலவற்றையும் அறிமுகம் செய்யும். பின்பு மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதனை அப்படியே காப்பி அடித்துக்கொள்ளும். உதாரணமாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார், முக அங்கீகாரத் தொழில்நுட்பம் இப்படி பலவற்றைச் சொல்லலாம். ஆனால், தற்போது முதன்முறையாக சீன நிறுவனங்கள் உருவாக்கிய டூயல் சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் பின்பற்றியுள்ளது. ஆனால், முழுமையாக காப்பி அடித்துள்ளது என்று கூற முடியாது. ஏனெனில் அதில் புரட்சியை ஏற்படுத்தும் இ-சிம் எனும் ஒரு தனித்துவத்தைப் புகுத்தியுள்ளது.



இ-சிம் என்றால் என்ன?

ஆப்பிளில் டூயல் சிம் என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ள இந்த மூன்று ஐ-போன் மாடல்களிலும் இரண்டாவது சிம்முக்கு ஸ்லாட் இருக்காது. காரணம் இந்த போனின் மதர்போர்டில் இ-சிம்முக்கான வசதி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மொபைல் ஆபரேட்டர்கள் நேரடியாகப் பயனர்களின் போனை அடைய முடியும் என்பதால் இதில் இரண்டாவது சிம்முக்கான ஸ்லாட் தேவைப்படுவதில்லை.



இ-சிம்மை எப்படி செயல்படுத்துவது?

* ஐ-போனின் செட்டிங்ஸில் செல்லூலர் ப்ளான் ஆப்ஷனில் சென்று Add Cellular Planஐ தேர்வு கொள்ள வேண்டும்.

* மொபைல் ஆபரேட்டர்கள் சிம்கார்டுக்குப் பதிலாக QR Code ஒன்றை வழங்குவர். அதனை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் இ-சிம்மை ஆக்டிவேட் செய்ய மொபைல் ஆபரேட்டர்களிடமிருந்து confirmation code ஒன்று வரும். அதனை உள்ளீடு செய்ய வேண்டும். இப்போது இ-சிம் கார்டு பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

ஆப்பிள் நிறுவனத்தின் Support pageஇல் கிடைத்துள்ள தகவலின்படி ஒரே நேரத்தில் பிஸிக்கல் சிம் மற்றும் இ-சிம் இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த இ-சிம்மை வேறு நம்பர்களுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இ-சிம்மை நம் விருப்பத்துக்கேற்ப primary மற்றும் secondary சிம்மாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆப்பிள் ஐ-போனின் இந்திய விலை


Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா