Skip to main content

புதிய Iphone ன் மேஜிக் சிம்!


புதிய Iphone ன் மேஜிக் சிம்!


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன்களான iPhone XS, iPhone XS Max, iPhone XR மூன்று மாடல்கள் நேற்று வெளியானது. இதில் முதன்முறையாக டூயல் சிம் மற்றும் டூயல் standby வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் அதன் ஐ-போனுடன் புதிய தொழில்நுட்பங்கள் பலவற்றையும் அறிமுகம் செய்யும். பின்பு மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதனை அப்படியே காப்பி அடித்துக்கொள்ளும். உதாரணமாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார், முக அங்கீகாரத் தொழில்நுட்பம் இப்படி பலவற்றைச் சொல்லலாம். ஆனால், தற்போது முதன்முறையாக சீன நிறுவனங்கள் உருவாக்கிய டூயல் சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் பின்பற்றியுள்ளது. ஆனால், முழுமையாக காப்பி அடித்துள்ளது என்று கூற முடியாது. ஏனெனில் அதில் புரட்சியை ஏற்படுத்தும் இ-சிம் எனும் ஒரு தனித்துவத்தைப் புகுத்தியுள்ளது.



இ-சிம் என்றால் என்ன?

ஆப்பிளில் டூயல் சிம் என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ள இந்த மூன்று ஐ-போன் மாடல்களிலும் இரண்டாவது சிம்முக்கு ஸ்லாட் இருக்காது. காரணம் இந்த போனின் மதர்போர்டில் இ-சிம்முக்கான வசதி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மொபைல் ஆபரேட்டர்கள் நேரடியாகப் பயனர்களின் போனை அடைய முடியும் என்பதால் இதில் இரண்டாவது சிம்முக்கான ஸ்லாட் தேவைப்படுவதில்லை.



இ-சிம்மை எப்படி செயல்படுத்துவது?

* ஐ-போனின் செட்டிங்ஸில் செல்லூலர் ப்ளான் ஆப்ஷனில் சென்று Add Cellular Planஐ தேர்வு கொள்ள வேண்டும்.

* மொபைல் ஆபரேட்டர்கள் சிம்கார்டுக்குப் பதிலாக QR Code ஒன்றை வழங்குவர். அதனை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் இ-சிம்மை ஆக்டிவேட் செய்ய மொபைல் ஆபரேட்டர்களிடமிருந்து confirmation code ஒன்று வரும். அதனை உள்ளீடு செய்ய வேண்டும். இப்போது இ-சிம் கார்டு பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

ஆப்பிள் நிறுவனத்தின் Support pageஇல் கிடைத்துள்ள தகவலின்படி ஒரே நேரத்தில் பிஸிக்கல் சிம் மற்றும் இ-சிம் இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த இ-சிம்மை வேறு நம்பர்களுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இ-சிம்மை நம் விருப்பத்துக்கேற்ப primary மற்றும் secondary சிம்மாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆப்பிள் ஐ-போனின் இந்திய விலை


Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்