Skip to main content

உங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது?

50 மில்லியன் facebook கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கலாம் என facebook நிறுவனம் தெரிவித்துள்ளது!உங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? எப்படி அறிவது?


50 மில்லியன் facebook கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கலாம் என facebook நிறுவனம் தெரிவித்துள்ளது!உலக அளவில் 223 கோடி பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பக்கமான facebook, தங்களது பயனர் கணக்குகளிலின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பத்தினை ஒப்புக்கொண்டு facebook பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. facebook-ல் பயனர்கள் பதிந்து வகைப்படப்படம் பதிவுகள் சமூகத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் facebook நிறுவனம், அதைப் பயன்படுத்துபவர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அறிந்துள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 50 மில்லியன் பயனர்களின் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், 5 கோடி பேர் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

facebook நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியில் இருந்து, facebook பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதனை facebook நிறுவன பொறியாளர்கள் ஆராய்ந்தபோது facebook பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனதெரியவந்துள்ளதாக facebook நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் இவர் குறிப்பிட்டுள்ளது படி பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகள் தானாக தங்களது செயலிகளில் இருந்து லாக்வுட் (logout) ஆகியிருக்கும், மேலும் பயனர்களை மீண்டும் லாக்இன்(login) செய்ய வேண்டும் என்றும் கோரும் என தெரிவித்துள்ளார்.உலக அளவில் 223 கோடிபேர் facebook-னை பயன்படுத்துகின்றனர், எனினும் இந்தியாவில் தான் அதிகமான பயனர்கள் (24.1 கோடி) facebook-னை பயன்படுத்துகின்றனர்.

தங்கள் கணக்கு பாதுகாப்பானது இல்லை என தெரிந்தும் பயன்படுத்துவது தவறில்லை, தொடர்ந்து தங்களது தகவல்களை இந்த கணக்கில் இணைத்து வைத்திருப்பதுதான் தவறு.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு