Skip to main content

இனி E-TDS செய்ய வேண்டிய அவசியம் இருக்காது

இனி E-TDS செய்ய வேண்டிய அவசியம் இருக்காது - கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி
இனி E-TDSசெய்ய வேண்டிய அவசியம்இருக்காது கருவூல 

கணக்குத்துறை முதன்மைச் செயலாளர்மதிப்புமிகு
 தென்காசி ஜவகர்IAS அவர்கள் உறுதி
தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியின் சார்பில் கருவூலகணக்குத்
 துறை முதன்மைச்செயலாளர் மற்றும் கருவூலத்துறை
 ஆணையாளர் திருதென்காசி ஜவகர் அவர்களைமாநிலத்
 தலைவர் செமுத்துசாமி அவர்கள்தலைமையில் பொதுச்செயலாளர் 
செல்வராஜ் மாநிலபொருளாளர் கே.பி.ரக்‌ஷித்ஆகியோர்
 கடந்த 8ம் தேதிசந்தித்து

எவ்வாறு சேமநலநிதி சந்தா (gpf)பிடித்தம் நேரடியாக அவரவர்கணக்கில் வரவுவைக்கப்படுகிறது
அதேபோன்று ஊழியர்களின்மாதாந்திர சம்பளத்தில் 
பிடித்தம்செய்யப்படும் வருமானவரித்துறை அவ்வப்பொழுது
அவரவர் PAN கணக்கில் வரவுவைக்கப்பட வேண்டும் என்றகோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை கவனமுடன் கேட்டகருவூல கணக்குத்  துறைமுதன்மைச் செயலாளர் 
திரு தென்காசி ஜவகர் அவர்கள் ஊதியம் ஆன்லைனில்  பெரும் வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் E-TDSசெய்யப்படாததால் form 16கிடைக்காதகாரணத்தினால்  தானே வருமான  வரித்துறை நோட்டீஸ்பெற்று அபராதம் செலுத்தும்நிலை  வந்துள்ளது என்று நினைவுகூர்ந்து அதன் அடிப்படையில்  மாநிலகணக்காயர் அலுவலகம்(AG)மற்றும்  வருமானவரித்துறைஅலுவலகம( IT) கருவூலகணக்குத் துறை(Tresury)அலுவலகம்  ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வரும் நவம்பர் 1 தேதி முதல் மாதாந்திர ஊதியத்தில் பிடிக்கப்படும் வருமானவரி அவரவர் PAN கணக்கில் அவ்வப்போது மாதந்தோறும்வரவு வைக்கப்படும்  என்று உறுதி அளித்தார் அதற்குதேவையான  மென்பொருள்தயாரிக்கப்பட்டு விட்டது என்றும்கூறினார். 

   விரைவில்கருவூல கணக்குத்துறை நடைமுறைப்படுத்த உள்ள இந்தநடைமுறையால்
 இடிடிஎஸ்செய்வது இனிமேல்தேவைப்படாது .
மார்ச் மாதம்ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள்
 நேரடியாகவருமான வரி படிவம் தாக்கல்செய்யலாம்
 என அறியவருகிறது இது சார்பான அறிவிப்பு விரைவில்
வெளியிடப் டும் என்றும் நமதுகோரிக்கையின் மீது
 உடனடிபதில் எழுத்துப்பூர்வமாக ஓரிருநாளில் அனுப்பி
 வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்