Skip to main content

முன்கூட்டியே சட்டப்பேரவை கலைவதை தடுக்க தேர்தல் ஆணையம் செக்..!

சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னதாக மாநில அரசு கலைத்தால் உடனடியாக
தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.


பொதுவாக சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். சட்டப்பேரவையில் மெஜாரிட்டி இருக்கும்பட்சத்தில் அந்த அரசால் 5 ஆண்டுகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.

ஆனால் மக்களவை தேர்தலோடு பல மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக சில மாநில சட்டப்பேரவைகளின் ஆயுட் காலத்தை உரிய காலத்திற்கு முன்னதாகவே கலைத்துவிட்டு மக்களவை தேர்தலோடு தேர்தலை சந்திக்கவும் பாஜக முயற்சிக்கிறது. இதேபோன்று சமீபத்தில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா அரசசையும் கலைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் அதனை ஆளுநரும் ஏற்றார். இதனையடுத்து தெலங்கானா அரசு கலைந்தது.



தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து தெலங்கானா மாநிலத் தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்நிலையில் சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னதாக மாநில அரசு கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. பொதுவாகவே ஒரு மாநிலத்திற்கு எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறதோ அன்று முதல் தான் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரும். அதன்பின் மாநில அரசாங்கம் மக்களுக்கு எந்தவித புது அறிவிப்பையோ, திட்டங்களையோ செயல்படுத்த அனுமதி இல்லை.



ஆனால் மாநில அரசாங்கம் உரிய காலத்திற்கு முன்னதாக சட்டப்பேரவையை கலைத்துவிடும் பட்சத்தில் அதன்பின் அடுத்து வரும் தேர்தலில் மக்களின் வாக்குகளை அள்ள பல சலுகை அறிவிப்பை வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனை தடுக்க சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னதாக மாநில அரசு கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. இதன்மூலம் அரசியல் கட்சிகளால் எந்தவித சலுகை அறிவிப்பையும் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பின் வெளியிட முடியாது. மேலும் அரசாங்கம் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்கும் திட்டத்தை கைவிடும் என்றும் தேர்தல் ஆணையம் கருதுகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு