Skip to main content

‘பேடிஎம்’க்கு வந்த புதிய சோதனை!

பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கிவரும் பேடிஎம் நிறுவனத்துக்குத் தற்போது புதிய சோதனை உருவாகும் நிலை உண்டாகியுள்ளது.


இந்தியாவில் டாக்ஸி சேவையில் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஊபர் தற்போது பணப் பரிவர்த்தனைகளுக்காக பேடிஎம், ஜியோ மணி, கிப்ட் கார்டுகள், கிரெடிட் / டெபிட் கார்டுகள், UPI உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிதாக கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் பே’ சேவையும் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வாடிக்கையாளர்களைக் கவர அறிமுகச் சலுகையையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள பதிவில், “கூகுள் பே சேவையைப் பயன்படுத்தி 10 ஊபர் சவாரிகளைச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான பரிசுத் தொகை காத்திருக்கிறது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுளின் இந்த அறிவிப்பால் தற்போது ஊபரில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் கூகுள் பேவுக்கு மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

‘கூகுள் டெஸ்’ என்ற பெயரில் இயங்கிவந்த சேவையைச் சமீபத்தில் கூகுள் நிறுவனம் ‘கூகுள் பே’ என்று பெயர் மாற்றம் செய்திருந்தது. பெயர் மாற்றத்தைத் தவிர அதில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் நிகழவில்லை. தற்போது கூகுள், HDFC, ICICI, கோடாக் மஹிந்திரா, ஃபெடரல் உள்ளிட்ட வங்கிகளுடன் இணைந்து இந்தியப் பயனர்களுக்கு உடனடி கடன் வழங்கும் செயலியை தொடங்கத் திட்டமிட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு