Skip to main content

‘பேடிஎம்’க்கு வந்த புதிய சோதனை!

பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கிவரும் பேடிஎம் நிறுவனத்துக்குத் தற்போது புதிய சோதனை உருவாகும் நிலை உண்டாகியுள்ளது.


இந்தியாவில் டாக்ஸி சேவையில் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஊபர் தற்போது பணப் பரிவர்த்தனைகளுக்காக பேடிஎம், ஜியோ மணி, கிப்ட் கார்டுகள், கிரெடிட் / டெபிட் கார்டுகள், UPI உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிதாக கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் பே’ சேவையும் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வாடிக்கையாளர்களைக் கவர அறிமுகச் சலுகையையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள பதிவில், “கூகுள் பே சேவையைப் பயன்படுத்தி 10 ஊபர் சவாரிகளைச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான பரிசுத் தொகை காத்திருக்கிறது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுளின் இந்த அறிவிப்பால் தற்போது ஊபரில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் கூகுள் பேவுக்கு மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

‘கூகுள் டெஸ்’ என்ற பெயரில் இயங்கிவந்த சேவையைச் சமீபத்தில் கூகுள் நிறுவனம் ‘கூகுள் பே’ என்று பெயர் மாற்றம் செய்திருந்தது. பெயர் மாற்றத்தைத் தவிர அதில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் நிகழவில்லை. தற்போது கூகுள், HDFC, ICICI, கோடாக் மஹிந்திரா, ஃபெடரல் உள்ளிட்ட வங்கிகளுடன் இணைந்து இந்தியப் பயனர்களுக்கு உடனடி கடன் வழங்கும் செயலியை தொடங்கத் திட்டமிட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா