Skip to main content

மாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதிபதி நூதன தண்டனை

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்த வழக்கில், மாணவன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் சேவை செய்யவேண்டும்என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 16.3.2017ல், அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன், தனது உறவினர்கள் 2 பேருடன்  சேர்ந்து, மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மாணவியின் பெற்றோரை 3 பேரும் சரமாரி தாக்கி மிரட்டல் விடுத்தார்களாம்.இதுகுறித்து மாணவியின் தந்தை கீழ்கொடுங்காலூர்போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 16 வயது மாணவன் மட்டும், திருவண்ணாமலை இளம்சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை நீதிபதி விக்னேஷ் பிரபு விசாரித்து, மாணவன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டாக்டர் மற்றும் நர்ஸ்களுக்கு உதவியாக ஒரு மாதம் சேவை செய்ய வேண்டும் என நேற்று தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நேற்று முதல் அந்த மாணவன், அரசு மருத்துவமனையில் சேவை பணியை மேற்கொண்டு வருகிறார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா