Skip to main content

காலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.இதற்கு, தனி கட்டணம் செலுத்த

வேண்டும் என்பதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களால், தனியார் மையங்களில் சேர முடியவில்லை.எனவே, இவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், 412 மையங்களில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


அந்த, 10 நாட்களும், நீட் சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், நீட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 6,000 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், காலாண்டு தேர்வு விடுமுறையில், நீட் பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா