Skip to main content

முளைக்கட்டிய பூண்டுகளின் நன்மைகள்!

பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளைக்கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளைக்கட்ட ஆரம்பித்து விட்டால் அவை உடலுக்கு தீங்கு தரும் என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.


ஆனால் அதில் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.அத்தகைய முளைக்கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நன்மைகள்

முளைக்கட்டிய பூண்டில் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், அது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
உடலில் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கிறது.
ரத்தம் உறைவதைத் தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இது சரும சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, முதுமைத் தோற்றத்தை தாமதமாக்குகிறது.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த்தொற்றுக்கள் மூலம் அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்சனைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
நரம்பு செல்கள் சீரழிவதைத் தடுத்து, உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, அதன் செயல்பாட்டை சீராக்கி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.