Skip to main content

'ஆன்லைன்' நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி

மத்திய அரசின், 'ஜே.இ.இ., ஆன்லைன்' நுழைவுத் தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்தி, இலவச பயிற்சி தரப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை, கடந்தாண்டு வரை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது. 

இந்நிலையில், நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை என்ற, என்.டி.ஏ., அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருந்து, என்.டி.ஏ., வழியாக, மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

என்.டி.ஏ., சார்பில், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி, 6 முதல், 20 வரை, முதல்கட்ட, ஜே.இ.இ., பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்., 1ல் துவங்கி உள்ளது; 30 வரை பதிவு செய்ய, அவகாசம் தரப்பட்டுள்ளது. 

தேர்வுக்கான விதிமுறை கள் மற்றும் கட்டுப்பாடுகள்,www.nta.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மூன்று மொழிகளில், ஏதாவது ஒன்றில் தேர்வை எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே, எழுத்து மற்றும் ஆன்லைன் என, இரண்டு முறைகளில், ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள், எழுத்துத் தேர்விலேயே பங்கேற்றனர். இந்த ஆண்டு, ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பதால், தேர்வை எதிர்கொள்வது எப்படி என, பிளஸ் 2 மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இதற்கு தீர்வு தரும் வகையில், ஆன்லைன் தேர்வில் பங்கேற்பது குறித்து, என்.டி.ஏ., சார்பில், இலவச மாதிரி தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான தேர்வு மையம் மற்றும் பயிற்சி தேதிகள், விரைவில் வெளியிடப்படும் என, என்.டி.ஏ., தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு