Skip to main content

பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - அண்ணா பல்கலை நிபந்தனை

PHD பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - அண்ணா பல்கலை நிபந்தனை !
பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர்

ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற புதிய விதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பல்கலைக்கழக ஆட்சி மன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.ஹெச்.டி பட்டம் பெற லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் ஆட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய விதியை அமல்படுத்த வேண்டும் என்ற முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக பணியமர்த்தப்பட உள்ள பேராசியர்களுக்கு பொருந்தும் வகையில் புதிய விதியை நடைமுறை படுத்தலாம் என்று மற்றொரு  முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள பேராசிரியர்களை புதிய விதி பாதிக்கப்பட கூடாது என்று தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டுக்கு லஞ்சம் பெற்றதை போல பி.ஹெச்.டி பட்டம் பெற லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. புதிய விதிகளை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தை ஐஐடிக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் முன்னாள் துணை வேந்தர்கள் தெரிவித்துள்ளனர். 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு