Skip to main content

புற்று நோய்க்கு என்று காப்பீடு (இன்சூரன்ஸ்) உள்ளது.! பயன்படுத்தி கொள்ளுங்கள்.!!

சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தாலே உடல்நல அவஸ்தையுடன் பொருளாதார சிக்கலும் சேர்ந்துகொண்டு எளிய மக்களை படுத்தி எடுத்துவிடும். இதில் அதிகபட்ச ஆபத்தாக புற்றுநோய் வந்துவிட்டால் மருத்துவ செலவு லட்சக்கணக்கில் எகிறும். இதனை கவனத்தில்
கொண்டு Cancer cover policy திட்டத்தை எல்.ஐ.சி கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்துக்கு தென்னிந்தியாவில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.


‘ஜீவன் ஆரோக்யா’ என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்கெனவே எல்.ஐ.சி விற்பனை செய்து வருகிறது. இதில் புற்றுநோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக ‘கேன்சர் கவர்’ என்ற பாலிசி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 1.31 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலிசிகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளடக்கிய தென் மண்டல அலுவலகத்தின் மூலம் மட்டும் 39,190 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.



‘இந்த பாலிசியில் 20 முதல் 65 வயது வரையிலானவர்கள் சேரலாம். அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம். ஆரம்பகட்ட புற்றுநோய்க்கு காப்பீட்டுத் தொகையில் 25 சதவீதம் ஒரே தவணையாகவும், நோய் முற்றிய நிலையில் முழு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும். மேலும், கட்ட வேண்டிய பிரீமியத் தொகையிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.


இத்துடன், காப்பீட்டுத் தொகையில் 1 சதவீதம் பாதிக்கப்பட்ட நபருக்கோ, இறந்தவரின் நியமன தாரருக்கோ ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு வழங்கப்படும் அம்சமும் இதில் உண்டு. பாலிசி காலம் 10 முதல் 30 ஆண்டுகள் வரை. குறைந்தபட்ச பிரீமியத் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.2,400 வசூலிக்கப்படுகிறது’ என்று இந்த திட்டம் பற்றி விவரிக்கிறார்கள் அதிகாரிகள்.

அதிகரித்து வரும் புற்றுநோய் அபாயம், மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும் அச்சம் போன்ற இன்றைய சூழலில், இப்படி ஒரு பாலிசி வரவேற்பைப் பெற்றதில் சந்தேகம் ஒன்றுமில்லைதான்!

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு