Skip to main content

ஆதார் எண் அவசியமா இல்லையா

உச்சநீதிமன்றம்*

*அரசின் நலத்திட்ட உதவிகள் முதல் அனைத்து அடிப்படை வசதிகள் பெறுவதற்கும் 

ஆதார் அவசியம் என மத்திய அரசால் கூறப்பட்டது. மேலும், தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன*. *இதையடுத்து, ஆதார் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, தனிமனித உரிமை மீறும் செயல் என்று கூறி ஆதாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன*.. *முன்னதாக இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி மனித உரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. எனவே, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து, ஆதாரை அனுமதிப்பதா இல்லையா என்பதுகுறித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.*

*இந்த நிலையில், இதன் இறுதித் தீர்ப்பு இன்று வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி, இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இரண்டு நீதிபதிகள் தனித்தனியாக தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.* *இருப்பினும், இந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்புதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மூன்று நீதிபதிகள் சார்பாக மூத்த நீதிபதி ஏ.கே சிக்ரி தீர்ப்பை வாசித்தார்.*


*அதில், ‘ஆதார் மற்ற அடையாள அட்டைகளைப் போல இல்லாமல் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆதார் எண்ணைப் போலியாக உருவாக்க முடியாது. அது ஒரு தனி நபரின் அடையாளம். எனவே, அடையாளத்துக்கு ஆதார் கட்டாயம். குறைந்த அத்தியாவசியத் தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகின்றன. ஆதார் தகவல்கள் திருடப்படுவதால்தான் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதுதான் தற்போது பிரச்னையாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் தனிநபரின் கண்ணியம் காக்கப்படும். ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். ஆதாருக்கான சட்ட விதிகளின்படி இதுவரை சேகரிக்கப்பட்ட மக்களின் தகவல்கள் கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அரசின் முக்கியப் பொறுப்பு. கையெழுத்திலிருந்து கைரேகை வைக்கும் நிலைக்குத் தொழில்நுட்பம் நம்மை மாற்றியுள்ளது. கையெழுத்தைக்கூட மாற்றலாம். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட கைரேகையை மாற்ற முடியாது. எனவே, அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்’ என தீர்ப்பு வழங்கினார்.*
👇👇👇👇👇👇👇👇
*✍எங்கு ஆதார் தேவை, தேவையில்லை என்ற விவரங்களும் கூறப்பட்டன. அவை பின்வருமாறு:*
👇👇👇👇👇👇👇👇

*❌ தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம்.*

*❌ நீட், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.*

*❌ பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை.*

*❌ வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் இணைப்புக்கு ஆதார் எண் கட்டாயமில்லை.*

*❌ ஆதார் இல்லை என்பதற்காக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், தனி நபர் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.*

*✅ பான் அட்டை பெற ஆதார் எண் கட்டாயம்.*

*✅ வருமான வரி தாக்கல்செய்ய ஆதார் அவசியம்*

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு