Skip to main content

தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வு நிலை தர ஊதியம் ரூ.5400 வழங்கவும், 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப் பயன் பெறும் வகையிலும் உத்தரவு !!

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரிடம் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று மனு கொடுத்தனர்.


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு இல்லா பணியிடத்தில் தொழிற்கல்வி 
ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கையில் ஒன்றான தர ஊதியம் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு தர ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. அந்த ஆணையின்படி, தர ஊதியம் விரைவில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று கேட்டு தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகனை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ஜெனார்த்தனன் கூறியதாவது:



உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி பதவி உயர்வு இல்லா பணியிடத்தில் பணியாற்றி  வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் கடந்த 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர். அந்த வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.



அதில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வு நிலை தர ஊதியம் ரூ.5400 வழங்கவும், 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப் பயன் பெறும் வகையிலும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை உடனடியாக பள்ளிக் கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு