Skip to main content

3,999 விலையில் Smartphone இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது ஹாங் காங்கை சேர்ந்த மொபைல் பிரான்டு
ஐவூமி (Ivoomi ) இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிகக்குறைந்த விலையில் 18:9 ரேஷியோ ஃபுல்வியூ டிஸ்ப்ளே கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் Ivoomi ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்த வரை 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே, குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர், 1 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பிளிகப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IVOOMI- I ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர்
- மாலி-T720 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்மார்ட் எம்.இ. ஓ.எஸ். 3.0
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

 Ivoomi I Pro ஸ்மார்ட்போன் பிளாட்டினம் கோல்டு, இன்டி புளு, மேட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.3,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

புதிய ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 விலைகளில் கிடைக்கும் சலுகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு