Skip to main content

3 மாதங்களுக்கு 300 ஜிபி ஃப்ரீ: ஜியோ பிரீவியூ சலுகை!

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜிகா ஃபைபர் பிரீவியூ சலுகையில் 300 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ தனது ஜிகா ஃபைபர் சேவை குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட்டது. இந்த சேவையை பெற ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என அறிவித்தது.

இந்நிலையில், பிரீவியூ சலுகை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு சேவை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

அதாவது, 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 300 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.


மேலும், பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 1 ஜிபி வரை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை பயன்படுத்த முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். பிரீவியூ சேவை நிறைவுற்றவுடன் அடுத்து பிரீபெய்ட் கட்டணங்களை செலுத்தி சேவையை தொடரலாம், சேவையை தொடர விரும்பாதவர்கள் சேவையை துண்டித்து, முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு