Skip to main content

வெறும் ரூ. 2,500/- இல் வாஷிங் மிஷின்!

கோவை ரத்தினபுரியை சேர்ந்த முருகேசன் என்பவர் குறைந்த விலையில் வாஷிங் மெஷினை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் .

தொடக்கத்தில் டேபிள் டாப் வெட் கிரைண்டர் உற்பத்தி செய்து வரும் நிறுவனம், மக்களுக்கு மிக குறைந்த விலையில் விற்று வந்தது. இந்நிலையில் இதன் அடுத்த முயற்சியாக வாஷிங் மெஷின் கொடுவரப்பட்டு உள்ளது.

புதிய வாஷிங் மிஷின் பற்றி அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் புதிய வாஷிங் மிஷின் விலை குறைவு என்றாலும், தரத்திலும், வசதிகளிலும் மற்ற நிறுவனத்தின் வாஷிங் மிஷினுடன் எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்கிறார்.

புதிய வாஷிங் மிஷினின் விலை ரூ.2,500. ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரூ.2,950. ஓர் ஆண்டு வாரண்டியும் அளிக்கப்படுகிறது. புதிய வாஷிங் மிஷினுக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய வாஷிங் மிஷின் 7 நிமிடங்களில் துணி துவைத்து முடித்துவிடும் என்றும் எளிதாக எங்கு வேண்டுமானாலும் கொண்டு என்றும் வாஷிங் மிஷின் தயாரிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

"சர்வதேச பிராண்டகளுக்கு ஈடாக விளம்பரம் செய்து விற்பனை செய்யும் பட்சத்தில் விலை அதிகரிக்க நேரிடலாம் என்பதால் ஏழை மக்கள் குறைந்த விலையில் பெற்று பயன்பெற வேண்டும் என்பதால் போஸ்டர் ,நோட்டீஸ் என சிறிய அளவிலான விளம்பர யுக்தியைத்தான் கையாண்டு வருகிறார் முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாஷிங் மெஷினின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

குறைந்த அளவிலான எடை,

றிய இடத்தில் வைத்து பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு ,

றைந்த விலை இது ஒரு பக்கம் இருக்க .....மேலும் பல சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா..?

துவைத்து அலசும் வசதி கொண்டது

ஆறு கிலோ வரை துணியை துவைக்க முடியும்

குறைந்த எடை, சிறிய வடிவமைப்பு என்பதால் சிறிய இடத்திலும் வைத்து பயன்படுத்தலாம்




ஒருவருட உத்தரவாதம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாஷிங் மெஷினை கோவையில் உள்ள மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். நீங்க கவலை படாதீங்க ..வெளி ஊர்களில் இருக்கும் மக்களும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விலாசத்தை தெரிவித்தால் நேரடியாக கொரியர் சேவை மூலம் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்படும் என தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு