Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ?


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி(டிஏ)

உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா

 என தமிழகஅரசுஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 மத்திய, மாநிலஅரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன்,
அகவிலைப்படியும்சேர்த்துவழங்கப்படுகிறது.

 இந்தஅகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு
 ஒருமுறைஉயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி,
ஜூலை ஆகியமாதங்களில்அகவிலைப்படி உயர்வு
 அமல்படுத்தப்பட்டு வருகிறது.

 மத்தியஅரசு அகவிலைப்படியை உயர்த்திய 
உடன் மாநிலஅரசுஊழியர்களுக்கு அந்தந்த
 மாநில அரசுகள் அகவிலைப்படியைஉயர்த்தி
 அறிவிக்கும்.இதனால் தங்களுக்கு எப்போது 
அகவிலைப்படிஉயர்த்தப்படும் என மாநில 
அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புஉருவாகியுள்ளது.
  தற்போது மத்திய அரசு ஊழியர்களான நமது
 மாநிலத்தில்பணிபுரியும் IAS,IPS ,IFS  அலுவலர்களின் DA வை 2% உயர்த்தி 
தமிழகஅரசு ஆணை பிறப்பித்துள்ளது .
இந்தமாத ஊதியத்துடன்அகவிலைப்படி 
உயர்த்தி வழங்கப்படுமா எனஅரசு ஊழியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.எனவே தமிழகத்திலும் 2 சதவீதம்
அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன்
வழங்கவும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையை
 சேர்த்துவழங்கவும் தமிழகமுதல்வர் நடவடிக்கை 
எடுக்க வேண்டும் என்றுஅரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்
 எதிர்பார்க்கின்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா