Skip to main content

மாணவர்களை குழப்பிய பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு: 'மாறியது' மாதிரி வினாத்தாள்

கல்வித்துறை வெளியிட்ட மாதிரி வினாத்தாளிற்கும், நேற்று நடந்த காலாண்டு பிளஸ் 1 ஆங்கில தேர்வு வினாத்தாளிற்கும் வேறுபாடு உள்ளதாக மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்தாண்டு முதல் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடத்திட்டம்புதிது என்பதால் காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும் அதற்கான வினாத்தாள் எப்படியிருக்கும் என ஆசிரியர், மாணவர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.
இதையடுத்து ஆக.,24ல் பிளஸ் 1 பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. ஆங்கிலம் ஒரே தாளாக மாற்றப்பட்டு மொத்தம் 90 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு மதிப்பெண் பகுதியில் 14, இரண்டு மதிப்பெண் பகுதியில்7, நான்கு மதிப்பெண் பகுதியில் 4, ஆறு மதிப்பெண் பகுதியில் 2, எட்டு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள்உட்பட மொத்தம் 44 வினாக்கள் இடம் பெற்றன.ஆனால் நேற்று நடந்த காலாண்டு தேர்வில் இடம் பெற்ற வினாக்களில் பல மாற்றங்கள் இருந்தன. குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் 20 வினாக்கள் கேட்கப்பட்டன. துணைப்பாடம் பகுதியில் இருந்தும் வினா இடம் பெற்றது.
எட்டு மதிப்பெண் பகுதியில் இடம் பெறவேண்டிய துணைப்பாடம், 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டது.இதுபோல் 6 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்ட 28 - 30 மற்றும் 31 - 33 (செய்யுள் பகுதி) வினாக்கள் பாடத் திட்டத்தில் இடம் பெறவில்லை. மாதிரி வினாத்தாளிலும் இல்லை. 'தவறை கண்டுபிடித்து எழுது' என புதிதாக 6 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்டுள்ளது.மாதிரி வினாத்தாளில் இடம் பெற்ற 'செய்யுள் பாட்டை கொடுத்து நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும்' பகுதி காலாண்டு தேர்வில் இடம் பெறவில்லை. இதுபோல் பல மாற்றங்கள் இருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆங்கில ஆசிரியர் ரமேஷ் கூறியதாவது:மாதிரி வினாத்தாள் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் காலாண்டு வினாத்தாளில் கேட்கப்பட்ட வினா வடிவங்களில் பல மாற்றங்கள் இருந்தன.
மாதிரியில் 44 வினாக்கள் இடம் பெற்றது. ஆனால் இத்தேர்வில் 48 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மாற்றத்தால் மாணவர்கள் குழப்பமானதுடன், மனஅழுத்தமும் அடைந்துள்ளனர் என்றார்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு