Skip to main content

19 வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள் - ஐபிபிஎஸ் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஐபிபிஎஸ் கிளார்க் நிலை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 19 வங்கிகளில் 7,275 கிளார்க் நிலை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய ஐபிபிஎஸ் (இன்ஸ்டிட்யூட் ஆப் பாங்கிங் பர்சனல் செலக்ஷன்) இன்று முதல் விண்ணப்பங்களை பெறுகிறது. அக்டோபர் 10 வரை விண்ண
ப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. டிசம்பர் மாதம் 8, 9, 15, 16 தேதிகளில் தொடக்க நிலை தேர்வும், ஜனவரி மாதம் 20ம் தேதி மெயின் தேர்வும் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளில் அமைக்கப்படுகின்ற தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது.



பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினருக்கான வயது வரம்பு 20 முதல் 28 வரை. விண்ணப்ப கட்டணம் ₹600, பட்டியல் இனத்தவர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ₹100 கட்டணம்.19 வங்கிகளில் அடுத்த ஆண்டுக்கான கிளார்க் நியமனங்கள் இந்த தேர்வு வழியாகவே நடைபெற உள்ளது. தொடக்க நிலையில் ஐபிபிஎஸ் நிர்ணயம் செய்கின்ற கட் ஆப் மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு பிரதான தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். 190 கேள்விகள் உள்ள மெயின் தேர்வுக்கான நேரம் 160 நிமிடங்கள் ஆகும். தொடக்க நிலை தேர்வில் பிரிவு வாரியாக நேர அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 25 நிமிடம் அதிகமாக பிரதான தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு