Skip to main content

பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் மதிப்பெண்ணில் குழப்பம்


பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் மதிப்பெண்ணில் குழப்பம்





பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள, பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், தமிழ் மற்றும் ஆங்கில வழி தேர்வு மதிப்பெண் மாறுபடுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர். 

தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இதில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவமாக, புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 வகுப்புக்கு, இரண்டு பாகங்களாக, புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், வினாத்தாள் எப்படி இருக்கும் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், இணையதளத்தில், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு, தனித்தனியாக வினாத்தாள்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், வேதியியல் பாடத்திற்கு, தமிழ் வழிக்கான வினாத்தாளில், எழுத்து தேர்வுக்கு மொத்த மதிப்பெண், 70 என, குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆங்கில வழி வினாத்தாளில், 75 மதிப்பெண் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா