Skip to main content

இந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை எளிதில் கொள்முதல் செய்யும் சிறப்பு அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு துறையின்
முக்கிய கூட்டாளி என்ற அங்கீகாரத்தை இந்தியா பெற்றது. இதன் தொடர்ச்சியாக எஸ்.டி.ஏ-1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்புதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் மேம்பட்ட மற்றும் முக்கியமான நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை அந்நாட்டிடம் இருந்து எளிதில் கொள்முதல் செய்ய வழிவகை செய்கிறது. இந்த அறிவிப்பானது இந்திய பாதுகாப்புத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்ற நாடுகள் பட்டியலில் உள்ள ஒரே தெற்காசிய நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா