Skip to main content

இந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை எளிதில் கொள்முதல் செய்யும் சிறப்பு அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு துறையின்
முக்கிய கூட்டாளி என்ற அங்கீகாரத்தை இந்தியா பெற்றது. இதன் தொடர்ச்சியாக எஸ்.டி.ஏ-1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்புதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் மேம்பட்ட மற்றும் முக்கியமான நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை அந்நாட்டிடம் இருந்து எளிதில் கொள்முதல் செய்ய வழிவகை செய்கிறது. இந்த அறிவிப்பானது இந்திய பாதுகாப்புத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்ற நாடுகள் பட்டியலில் உள்ள ஒரே தெற்காசிய நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்