Skip to main content

சுதந்திர தினத்தில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை Photo எடுத்து Workplace @ Facebook இல் வெளியிட உத்தரவு.

சுதந்திர தினத்தன்று விழா முடிந்ததும், பெற்றோர்
- ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவி
ட்டுள்ளது
பள்ளிக்கல்வி துறை சார்பில், இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்
72வது சுதந்திர தினத்தை வரும் 15ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மிகவும் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிகளில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும், சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும், அவர்கள் பட்ட இன்னல்களையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்து உணர்வு பூர்வமாக கொண்டாட வேண்டும்
பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்துதல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது
நடப்பு கல்வி ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்
எனவே, ஆண்டுதோறும் இதனடிப்படையில், இந்தியாவின் 72வது சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும்
இக்கூட்டத்தில் மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள் மற்றும் அடைவு திறன் குறித்தும், பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள்(மின்னல் கல்விச் செய்தி) குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளை கேட்டறிதல் சார்ந்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.நிகழ்ச்சிகள் நிறைவுற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தப்பட்டது தொடர்பான புகைப்படங்களை தலைமையாசிரியர்களது ''லாக் இன்'' மூலம், ''ஒர்க் பிளேஸ்''ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்