Skip to main content

Jio வழங்கும் 2GB கூடுதல் டேட்டாவை பெறுவது எப்படி?

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஏற்கனவே இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், இப்போது அறிவித்த சலுகையின் மூலம் 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவை பெற முடியும், அதவாது ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக இப்போது 3.5ஜிபி டேட்டாவை பெற முடியும்.

மேலும் ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா சலுகை இன்று வரை மட்டுமே வழங்கப்படும் என்று ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் டேட்டா சலுகையுடன் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது.
ஜியோ பிரிபெய்ட்:
ஜியோ நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் ஜியோ டிஜிட்டல் சலுகை பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.


பெறுவது எப்படி:
மைஜியோ செயலியில் உங்கள் ஜியோ நம்பரை கொண்டு சோதனை செய்து பார்த்து, பின்பு இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்த முடியும். மேலும் இந்த சிறப்பு சலுகை இன்று வரை மட்டுமே இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.594- ரீசார்ஜ் திட்டம்:
இதற்குமுன்பு ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.594-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 500எம்பி வரை 4 ஜி டேட்டா பயன்படுத்த முடியும், குறிப்பாக ஆறு மாதங்களுக்கு மொத்தம் 84ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். இதனுடன் இலவச வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜனவரி 26, 2018 அன்று ரூ.49 திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி எப்யுபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும்வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 50எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு