Skip to main content

அந்நியர்களுடன் உங்களை இணைப்பதற்கு Facebook-ன் புதிய முயற்சி.!

உங்கள் வாழ்க்கையில் புதிய மனிதர்களின் நட்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவரா நீங்கள்? அப்ப இந்தப் பதிவு உங்களுக்கானது தான். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மட்டுமே பழகி வெளி உலகத்தில்
உள்ள புதிய மனிதர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமல் போனவர்களுக்கு, அதைச் சரியாக செய்ய முடியாமல் தவித்த இளைஞர்களுக்கு பேஸ்புக் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது.
புதிய மனிதர்களுடன் உங்கள் நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ள பேஸ்புக் இந்த புதிய முயற்சியைச் சோதனை செய்துகொண்டிருக்கிறது. உங்கள் நண்பர்களின் பதிவுகள் அல்லது படங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் நபர்களுடன், உங்களை இணைக்கும் வசதியை இந்த புதிய சேவை வழங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக இணைக்கும் விஷயங்கள்
உதாரணமாக, நீங்கள் இணைக்கப்படாதவர்களுடன் பொதுவாக இணைக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் அவர்களுடன் பழகுவதற்கான வசதியை இந்த புதிய சேவை வழங்கும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் குழு

உங்களின் புதிய நண்பர் நீங்கள் இருக்கும் பொது பேஸ்புக் குழுவில் இருப்பவராகவோ, அல்லது நீங்கள் ஒரே கல்லூரிக்கு சென்றிருந்தால், அல்லது அதே நிறுவனத்துக்காக வேலை செய்பவர் என்றால் - அந்த நபரின் பெயருடன் அவருடைய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

விசிபிள் மோடு
நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் மற்றும் அவருடன் உங்களுக்குப் பொதுவா இருக்கும் குழுவின் விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்படும். அந்த நபரின் விபரங்கள் விசிபிள் மோடில் இருந்தால் மட்டுமே அந்த நண்பரின் நண்பராக இருக்கும் பட்சத்தில் முழு விவரங்களை உங்களால் காண முடியும்.

"திங்ஸ் இன் காமன்"
பொதுவாகப் பகிரப்பட்ட விஷயங்களைக் கொண்டு புதிய மக்களைத் தெரிந்துகொண்டு இணைக்க இந்த சேவை உதவுகிறது, "திங்ஸ் இன் காமன்" என்ற லேபிள் உங்களுடன் பொதுவான இணைப்பு குழுவின் நபர்களை உங்களுக்குத் தனித்து காட்டும் படி இந்த புதிய சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு