Skip to main content

ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!!!

ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்
சத்யா திரிபாதி

இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் சத்யா திரிபாதி ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஐ.நா. சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்ததாவது: இந்தியாவை சேர்ந்த சத்யா திரிபாதியை துணை பொதுச்செயலாளராக நியமித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.



கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. சபையில் பல்வெறு முக்கிய பொறுப்புகளை சத்யா திரிபாதி வகித்துள்ளார். மாசுக் கட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ.நா.வின் இயக்குநர் மற்றும் நிர்வாகத் தலைவர், சைப்ரஸ் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையின் சட்டம் மற்றும் ஒப்பந்தக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் சத்யா திரிபாதி திறம்பட செயல்பட்டார்.

2030-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் வளர்ச்சி திட்டத்தின் மூத்த ஆலோசகராக கடந்த ஆண்டு முதல் சத்யா திரிபாதி இருந்து வருகிறார் என்று ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார். சத்யா திரிபாதி கடந்த 35 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், பொருளாதார நிபுணராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா