Skip to main content

விடைத்தாள் திருத்துவதில் புதிய முறை

விடைத்தாள் திருத்துவதில் புதிய முறையைப் பின்பற்றுவதால், மாணவர்கள் தேர்வெழுதிய
சில மணி நேரங்களிலேயே தேர்வு முடிவுகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
  மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். மற்றும் எம்.சிஹெச். ஆகியவற்றுக்கான இறுதித் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
  217 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். அவர்களின் விடைத்தாள்கள் ஆன் ஸ்கிரீன் இவால்யூஷன் என்ற முறையைப் பின்பற்றி திருத்தப்பட்டுள்ளன.
   அதன்படி, மாணவர்களின் விடைகளுக்கான குறியீடுகள் தயாரிக்கப்பட்டு, படங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றின் உதவியுடன் கணினியில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.
  இதுதொடர்பாக,இப்பல்கலைக்கழக தேர்வுத் துறை உயரதிகாரி கூறியது.

  ஆன் ஸ்க்ரீன் இவால்யூஷன்' மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால் அவற்றில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை.
   எனவே, மறுமதிப்பீடு, மறுகூட்டல் போன்ற நடைமுறைகள் தேவையில்லை. கேள்வித்தாள்களுக்கு போலியான எண்கள் கொடுக்கப்பட்டதால், விடைத்தாள்களைக் கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்பு இல்லை.
  ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் முறையின் மூலம் விடைத்தாள்கள் திருத்தும்பட்சத்தில் முடிவுகளை வெளியிடுவதற்கு 10 அல்லது 20 நாள்களாகும்.
  இந்தப் புதிய முறையின் மூலம் தேர்வெழுதிய அதே நாளில் சில மணி நேரங்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
   இதனால், மாணவர்கள் வேலைக்கு அல்லது உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையற்ற தாமதம் ஏற்படாது.
  2017 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் புதிய முறை சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது.
   தற்போது இம்முறையைப் பின்பற்றி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., செவிலியர் படிப்பு, மருந்தியல் படிப்பு உள்ளிட்டவற்றுக்கான தேர்வு விடைத்தாள்களும் திருத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
நன்றி :தினமணி நாளிதழ்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு