Skip to main content

ஒரு வாத்தியாரின் குரல் ஆசிரியர்களை படம் பிடித்துக் காட்டும் ஒரு கவிதைத் தொகுப்பு

வாத்தியார் குரல்
 ==============
வாத்தியாரு வேலதான்
வசதின்னு பேசுறாக...
உக்காந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...


 பசங்க மனசெல்லாம்
பாழடைஞ்சு கெடக்குது
சொல்லிக்கொடுத்த
வாத்தி மனசோ
சுக்கு நூறாக்கெடக்குது.

காலையில பள்ளியில
கால் வெச்சு போகையில...
டிக் டிக் டிக் மணியடிக்க
திக் திக்குன்னு மனசடிக்குது.


பசங்க முடியெல்லாம்
பக்காவா இருக்கனுமாம்
பக்குவமா சொன்னாலும் மனசு
பக்கு பக்குனு அடிக்குது
பசங்க ஏதாச்சும்
பண்ணிடப் போரான்னு
துடிக்குது...

படிக்கச்சொன்னாலே
பசங்க
துடிச்சு போற காலமிது...
படிக்க வெக்கத்தான்
வாத்தியாரு வேலையிது..

கண்டிக்கவும் கூடாது
கட்டளையும் கூடாது

திட்டவும் கூடாது
குட்டவும் கூடாது

மார்க்கு மட்டும்
மலை போல
கொட்டனுமாம்..

ஆதாரு இருக்கான்னு
அக்கறையா கேக்கனுமாம்
அக்கவுண்டு நம்பரை
அட்ரசோட
வாங்கனுமாம்...

சீருடை இல்லைன்னா
சிரிச்சிக்கிட்டே
கேக்கனுமாம்...

அடிச்சி கிடிச்சு
போட்டாக்க
அம்புட்டுதான் வாழ்க்க...
கழியத்தொட்டதுக்கு
களிதானே வாழ்க்க...


பசங்க
கேலிப்பேச்சு
பேசினாலும்
கேக்கத்தான் வேணும்...
கத்தியாலக்குத்தினாலும்
வாங்கத்தான் வேணும்..

போசாக்கு இல்லாத
பையனையும்
பாசாக்க
வெக்கனுமாம்
பாவப்பட்ட ஜென்மம் அது
வாத்தியாரு பொழப்பிது..

நரக வாழ்க்கையிது
நல்லபடி
நகரா வாழ்க்கையிது...

இயல்பான
ரத்த அழுத்தம்
ரெண்டு மடங்கு ஏறுது..
துடிக்கிற இதயமோ
எப்போதான்
நிற்குமோ!?

அச்சமில்லை அச்சமில்லை
சொல்லி கொடுத்த
வாத்தியாரு
சொன்னதுமே
நடுங்குறாரு..

சாக்பீசு
தேயுமுன்னே
வாத்தியாரு
தேயுராரு...

ஒத்த இதயத்த
பிளந்தெடுக்க
எத்தனை அம்புகதான்
கிளம்பி வருமோ?

பெத்தவங்க
ஒருபக்கம்
மத்தவங்க
மறுபக்கம்.

சமூகம்
ஒருபக்கம்
சங்கடங்கள்
மறுபக்கம்

அம்புகள
தொடுத்து நின்னா
அப்பாவி வாத்தியாரு
என்னதான்
பண்ணுவாரு...

வாத்தியாரை
மதிக்கும்
வசந்த காலம் போச்சு
வாத்தியாரை
மிதிக்கும்
கலி காலம் ஆச்சு...

இப்பதெல்லாம்
நெறைய வாத்தியார்கள்
கரும்பலகையை
கையால் துடைப்பதில்லை
கண்ணீரால்
துடைக்கிறார்கள்.
சாக்பீஸ்
துகள்களால்
நுரையீரலை
அடைக்கிறார்கள்..

வாத்தியாரு வேலதான்
வசதியின்னு பேசுறாக...
உக்கந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...

அவங்களிடம்
சொல்லுங்க...


" வாத்தியார் பொழப்பு
வாழ்க்கையில் இழப்பு "
என்று....

செங்கமலன்
திண்டுக்கல்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு