Skip to main content

அரசியல் கட்சி தொடர்பிருந்தால் நல்லாசிரியர் விருது கிடைக்காது

அரசியல் கட்சிகளின் தொடர்பு உடையவர்களுக்கு, நல்லாசிரியர் விருது கிடையாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்.,
5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் விருது தரப்படுகிறது. தமிழக அரசும் தனியாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது.


இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விதிகளுக்கான அரசாணையை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்டார். இந்த முறை, வருவாய் மாவட்ட வாரியாகவும், பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையிலும், விருது பிரித்து வழங்கப்படுகிறது. மாவட்ட வாரியாக, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு, 32; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்பு துறை பள்ளிகளுக்கு, தலா, இரண்டு; மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு, மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன.விருதுக்கான பரிசீலனையில், மாவட்டக் குழுவுக்கு, முதன்மை கல்வி அதிகாரியும், மாநிலக் குழுவுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரும் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளனர். 


விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றலுக்கு, முழுமையாக தங்களை அர்ப்பணித்து பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.போதிய விண்ணப்பம் வராவிட்டாலும், பள்ளிகளில் ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்ட, சிறந்த ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெற்று பரிந்துரைக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான ஆசிரியர்களை, பட்டியலில் சேர்க்கக் கூடாது. அதேபோல், அரசியல் கட்சிகளின் தொடர்புடைய மற்றும் சிபாரிசு பெறும் ஆசிரியர்களையும், விருது பரிந்துரை பட்டியலில் இணைக்கக் கூடாது என, புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு