Skip to main content

மகப்பேறு விடுப்பு நாட்களைப் பணிக்காலமாக கருதலாம்!


அரசு ஊழியர்களின் பயிற்சி கால நிறைவு மற்றும் பதவி 
உயர்வுக்கு மகப்பேறு கால விடுப்பையும் பணிக் காலமாக கருத வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருபவர் எஸ்.ரேணுகா. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 2001ஆம் ஆண்டு வருவாய் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். எனது பெயர் 2007, 2008ஆம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தகுதியான, உரிய நேரத்தில் 5 ஆண்டு பயிற்சி காலத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறினார்கள்.

மகப்பேறு விடுப்பில் சென்றதால் குறிப்பிட்ட நேரத்தில் 5 ஆண்டு பயிற்சி காலத்தை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக் காலமாக கருதி பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016இல் அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்வது அவர்களின் பதவி உயர்வுக்கு ஒரு தடையல்ல எனக் கூறப்பட்டுள்ளது" என மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார்.

இதைகேட்ட நீதிபதி, "அரசு ஊழியர்கள் 5 ஆண்டு பயிற்சி காலத்தை நிறைவு செய்யவும், பதவி உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கும்போதும் அவர்களின் விடுமுறை காலத்தையும் பணிக் காலமாக கருத வேண்டும். ஆதலால், மனுதாரரின் பெயரை 2008ஆம் ஆண்டில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து 6 வாரத்தில், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு