Skip to main content

தற்காலிக பட்டச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் தற்காலிக பட்டச் சான்றிதழை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் உடனடியாக கல்விச் சான்றிதழ் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். படிப்பை முடித்து மூன்று மாதங்களுக்குப் பிறகே அவர்களுக்கு புரொவிஷனல் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதிலும் சிரமம் இருந்து வந்தது.
இந்த நிலையை மாற்றும் வகையில், மாணவர்கள் படிப்பை முடித்த உடன் தற்காலிக புரொவிஷனல் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2018 ஏப்ரலில் தேர்வெழுதி பட்டப்படிப்பை முடித்திருக்கும் மாணவர்கள், www.unom.ac.in 
என்ற இணையதளத்திலிருந்து தற்காலிக பட்டச் சான்றிதழை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு