Skip to main content

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எப்போது?: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்!

சென்னை : 'மறுவரையறைக்கு பின், இடஒதுக்கீடுக்கான அறிவிப்பாணை வெளியிட்ட தேதியில் இருந்து, மூன்று மாதங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்
துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. அதில், 2017 நவம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி, உத்தரவிட்டிருந்தது; இதற்கான அறிவிப்பை, செப்டம்பரில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது.



தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர், மாலிக் பெரோஸ் கான், செயலர் ராஜசேகருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார். இந்த வழக்கில், அதிகாரிகள் இருவரும், நீதிமன்றத்தில் ஆஜராகினர்; வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் முன், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையர், மாலிக் பெரோஸ் கான் தாக்கல் செய்த அறிக்கை:

தொகுதி மறுவரையறைக்கான கமிஷன், பணிகளை முடித்து, வரும், ௩௧ம் தேதி, அரசுக்கு பரிந்துரை அனுப்பும். இந்தப் பரிந்துரையை ஏற்று, அறிவிப்பாணையை, அரசு வெளியிட வேண்டும். அதன்பின், ஆறு வாரங்களுக்குள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்களுக்கான வார்டுகள் ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை, மறுவரையறைக்கான கமிஷன் அனுப்பும். இதன் அடிப்படையில், ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பாணையை அரசு வெளியிட வேண்டும்.

வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக, மறுவரையறைக்கான கமிஷன் பரிந்துரையை ஏற்று, அரசு அறிவிப்பாணையை வெளியிட்ட தேதியில் இருந்து,
மூன்று மாதங்களில், தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''வேண்டுமென்றே தேர்தலை நடத்தாமல், இழுத்தடித்து வருகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி, அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில், மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகினர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரிக்கும் என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு