Skip to main content

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை

தேர்வு வாரியம் மூலம் தேர்வாகும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட இருக்கிற சிறப் பாசிரியர்களுக்கு ஆசிரியர் தின மான செப்டம்பர் 5-ம் தேதி பணி நியமன ஆணை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்உறுதியளித் துள்ளார். தமிழகத்தில் இதுவரையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்று வந்த தையல், ஓவியம், உடற் கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பணிநியமனம் தற்போது முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் போட்டித்தேர்வு மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.
 அந்த வகையில், அரசு பள்ளி களில்1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிவுகள் ஜூலை 27-ம் தேதி வெளியிடப் பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,846 பேர் தகுதிபெற்றனர். அவர் களுக்கு கடந்த 13-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் சான்றி தழ் சரிபார்ப்பு நடந்தது. அப் போது கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைசரிபார்க் கப்பட்டு வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு ஏற்ப உரிய மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. உரிய கல்வித்தகுதி இல்லாமல்விண்ணப்பித்தவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்துகொண்ட சுமார் 200 தேர்வர்கள் சனிக்கிழமை கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையனை அவரது இல்லத் தில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். சிறப்பாசிரியர் தேர் வுப் பட்டியலை விரைவாகவெளி யிட வேண்டும் என்றும் நடப்பு கல்வி ஆண்டு வரையிலான காலி யிடங்களை சேர்த்து கூடுதல் சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஓவிய ஆசிரியர் தமயேந்தி வரைந்தஅமைச்சர் செங்கோட்டையனின் உருவப்படத்தை அவருக்கு நினை வுப்பரிசாக வழங்கிய தேர்வர்கள், கேரள வெள்ள நிவாரண நிதி யாக ரூ.31 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினர்.

அமைச்சரை சந்தித்து வந்த தேர்வர்கள் கூறுகையில், சிறப் பாசிரியர் தேர்வுப்பட்டியல் தயாரிப் புப் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடை பெற்று வருவதாகவும், தேர்வுபட்டி யலை விரைந்து வெளியிட்டு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி அன்று பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச் சர் உறுதியளித்ததாகவும் தெரிவித் தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளி யிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக் கான அறிவிப்பு வெளியிட்டு ஓராண் டுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு