Skip to main content

வாட்ஸ்அப்பில் இதெல்லாம் நடக்குதா? அதிர்ச்சிக்கே அதிர்ச்சி!!

இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியான வாட்ஸ் அப்பில் ஹேக் செய்ய முடியும் என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்திகள் பரவி, பல அப்பாவிகள் அடித்தே கொல்லப்பட்டனர். இதனை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாட்ஸ்அப் நிறுவனமும், இதனை தடுக்கும் விதமாக, போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில், ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் வசதி அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றி அமைக்க முடியும் என்று, செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.

இதனை அவர்கள் ஒரே ஒரு கிளிக்கில் செய்து முடித்து விடுவார்களாம், அதாவது நாம் அனுப்பும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க முடியுமாம், மேலும், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவைக்களிலும், நீங்கள் அனுப்பியதாக ஒருவருக்கு குறுந்தகவல்களை அனுப்ப இயலுமாம்.
என்ன சொல்லி என்ன பண்ண., ''முதலை வாயில் தலையை விட்ட கதை தான் இன்றய இணைய பயன்பாடு'', நாம் நம் இரகசியங்களை நேரில் வைத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது என்று சமூக ஆர்வலர்களை கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா