Skip to main content

குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு காலியிடங்களை நிரப்ப அவசியம் இல்லை- உயர்நீதிமன்றம் அதிரடி

குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு எம்.எஸ்சி. காலியிடங்களை நிரப்ப அவசியம் இல்லை- உயர்நீதிமன்றம் அதிரடி

ஐதராபாத்தை சேர்ந்தவர் தாண்டேக் ரோகிணி என்பவர்
சென்னை பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்தார். மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததால் அவருக்கு இடம் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாண்டேக் ரோகிணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘இளங்கலை படிப்பில் 71 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, முதுகலை படிப்பில் இடம் வழங்க முடியும். மனுதாரர் 61 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பதால் அவருக்கு இடம் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்பில் பல இடங்கள் காலியாக உள்ளன. எனவே மனுதாரருக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘எம்.எஸ்சி. படிப்பில் பல இடங்கள் காலியாக இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை அனுமதித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு