Skip to main content

கற்றலில் குறைபாடு: பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கற்றலில் குறைபாடு மற்றும் உளவியல் ஆலோசனை குறித்த முதுநிலைப் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேர் பிகேவியரல் சயின்சஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் படிப்பை வழங்குகின்றன.

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் இந்த பட்டயப் படிப்பு வழங்கப்பட உள்ளது. ஏதாவது பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்பை முடித்தவர்கள் பள்ளிகளில் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களாகவும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்ற முடியும்.

குழந்தைகள் நலம், நரம்பியல், ஞாபக மறதி நோய், தூக்கக் குறைபாடு, மண வாழ்க்கை தொடர்பான உளவியல் பிரச்னைகள், வளர் இளம்பருவ பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனை அளிக்கும் வகையில் முதுநிலை ஆலோசனை பட்டயப்படிப்பு வழங்கப்பட உள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம், மாற்று மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள், இயன்முறை மருத்துவம், ஆக்குபேஷனல் தெரப்பி, ஸ்பீச் தெரப்பி, சமூக அறிவியல், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றோர் முதுநிலை ஆலோசனைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பை படித்தவர்கள் பள்ளி, மருத்துவமனைகள், கிளினிக்குகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் ஆலோசகர்களாகப் பணியாற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு 98439 74984 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு