Skip to main content

போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் புதிய குழு அமைக்கப்படும்

போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் புதிய குழு அமைக்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர் விவரத்தை அளித்தால் தனிநபர் ரகசியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு மோசமான
துஷ்பிரயோக  பாதிப்பு ஏற்படும்’’ என மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ்ஆப் போன்ற சமூக இணையதளங்களில் பரவும் வதந்திகளால் நாட்டில் கூட்டு வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்தன. இவற்றை அனுமதிக்க முடியாது என கடந்த மாதம் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம்,  இதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்த, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக ஊடக துஷ்பிரயோகத்தை  கட்டுப்படுத்த அனைத்து தரப்பினருடனும் ஆலோசிக்கப்படும் என்றார். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.  இதற்கு பதில் அளித்த வாட்ஸ்ஆப் நிறுவனம், ‘‘போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த  பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை கண்காணிக்க இந்தியாவில் தனி குழு அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தகவல் அனுப்புபவர் விவரத்தை அளித்தால், தனிநபர் ரகசியத்துக்கு அச்சுறுத்தல்  ஏற்பட்டு மோசமான துஷ்பிரயோக பாதிப்பு ஏற்படும்’’ என தெரிவித்துள்ளது.


இதனால் அரசின் முக்கிய கோரிக்கைக்கு, வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் தீர்வு காணவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து வாட்ஸ்ஆப் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘குடும்பங்கள், டாக்டர்கள், வங்கிகள் மிக முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்ஆப்பை சார்ந்துள்ளனர். போலீசாரும் விசாரணை மற்றும் குற்றங்கள்  தொடர்பான் தகவல்களை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்கின்றனர். எனவே வாட்ஸ்ஆப் தகவல் அனுப்புபவரின் விவரத்தை தெரிவித்தால், அது தனிநபர் ரகசியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி மோசமான துஷ்பிரயோக பாதிப்பு  ஏற்படும். இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோருக்கு சேவை அளிக்கவும், இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்யவும், இந்தியாவில் இரு மூத்த அதிகாரிகள் தலைமையில் தனி குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.  மக்கள் பாதுகாப்புக்கு உதவும் வகையில் வாட்ஸ் ஆப்-ஐ மேம்படுத்துவதில்தான் எங்கள் கவனம் உள்ளது’’ என்றார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு