Skip to main content

தொடக்க கல்வி அதிகாரி பதவியில் மாற்றம்

சென்னை:கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியை,
வட்டார கல்வி அதிகாரியாக மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில், பல அதிகாரிகள்
பணியிடங்களை மாற்றியமைத்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டது. தொடக்க கல்வி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் பள்ளிகளுக்கான, மாவட்ட அதிகாரிகள் பதவிகலைக்கப்பட்டது.
உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டார கல்வி அதிகாரிகளாக மாற்றப்பட்டன. ஆனால், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்படாமல் இருந்தன.அரசாணையில், அவர்களின் பதவி இல்லாததால், கருவூலத்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைஏற்பட்டது.

இதையடுத்து, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியும், வட்டார கல்வி அதிகாரிகள் பதவிக்கு நிகரானது என, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா