Skip to main content

பாடப்புத்தகத்தில் தவறான விஷயங்கள் இருப்பதாக கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து

குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் தவறான விஷயங்கள்
இருப்பதாக கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார் இந்தியஅணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர

சேவாக் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்
கிரிக்கெட் மட்டுமல்லாது சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களில் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்
இந்நிலையில், பாடப்புத்தகத்தில் குடும்பங்களின் வகைகள் என்ற தலைப்பில் சிறிய குடும்பம், கூட்டுக்குடும்பம் ஆகிய இரண்டு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூட்டுக் குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் பல குழந்தைகள் இருப்பார்கள்
ஆனால் கூட்டுக் குடும்பத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது
இதைப் புகைப்படம் எடுத்து இதன் மீதான கருத்தை சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் இது போன்று நிறைய தவறான விஷயங்கள் உள்ளது. இதை மறுமதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தங்களின் வேலைகளைச் சரியாக செய்யவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்