Skip to main content

5ஜி செல்போனை அறிமுகம் செய்த மோட்டோ!

மோட்டோ நிறுவனம் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் செய்யக்கூடிய மோட்டோ இஸட் 3 என்னும் புதிய மாடல் செல்போனை சிகாகோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

செல்போன் வர்த்தகத்தில் குறிப்பிடத்தகுந்த இடத்திலிருக்கும் மோட்டோ நிறுவனம் மற்ற நிறுவனங்களிலிருந்து மாறுபட்ட புதிய அம்சங்களைத் தனது தயாரிப்புகளில் கொண்டுவர முயற்சி செய்கிறது. அந்தவகையில் தற்போது மோட்டோ இஸட் 3 என்னும் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை நெட்வொர்க்கான 5ஜி, இதில் சப்போர்ட் ஆகும் வண்ணம் தயாரிக்கப்பட்டிருப்பது முக்கியமான இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் தற்போதைய நிலவரங்களின்படி,வெரிஸான் என்னும் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற நிறுவன 5ஜி சேவை பற்றி தெரிவிக்கப்படவில்லை.
சிறப்புகள்

6 இன்ச் திரை, 8.1 ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்,835 SoC, 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 12 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 4GB RAM, 64 GB ROM ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.33,000. வெரிஸானில் பிரத்யேகமாக ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்கு வருகிறது

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா